94
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
உனது ஒரு பகுதியை இறைவனுக்கும்,மற்றொரு பகுதியை வேறு யாருக்காவது அளித்தும் பிளவுபட்டிருப்பா யானால், எவையும் இடர்ப்பாடாய்ப் போய்விடும்.
-கோ
★★★★
உள்ளுயிர்ப்பு உலகில் எனக்கு நம்பிக்கை உள்ளது, ஆனால் அது உலகியலிலிருந்து விலகியுள்ளது என்கிற நோக்கில்லை. அதனுடைய சூழ்ந்த உண்மைத் தன்மை யினால்தான்.
-ஆ
★★★★
கொடிய புயல் காற்றுகள் வீசியடிக்கும் உலகம்தான் இசை உலகம். அதே சமயம் அழகாகிற இசையினால் கட்டுப்படுத்தப்பட்டது, அதன் கடுமை.
-ப.ப
கடவுளையன்றி வேறு எவர் ஏழைகளைக் கருத்தில் கொள்கிறவர்?
-த.ஒ
★★★★
வட்டமிட்டுச் சுழலும் நாட்டியத்தின் நெஞ்சத்தில் இடைப்பகுதி அசைவற்று அமைதியாக இருக்கிறது.
-மின்
★★★★
என் நெஞ்சமே, அமைதியாக அமர்ந்திரு, உன் தூசியைக் கிளப்பாதே.
உன்னை அடைவதற்கான வழியை உலகம் தானே தெரிந்து கொள்ளட்டும்.
-ப.ப
★★★★