இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அன்னம் பழிக்க நடந்தாளின்
அழகு விழியோ கருங்குவளை?
என்னுயிர் மாய்க்க நல்லுணவில்
இட்ட நச்சுப் பெருங்குவளை!
3
வற்றா ஏரிக் கரையோரம்,
மலர்ந்த பொய்கைத் துறையோரம்
சுற்றி வந்து சிரித்தாளின்
சொக்கு விழிகள் மாவடுவே!
சுற்றி வந்து சிரித்தாளின்
சொக்கு விழிகள் மாவடுவே?
பெற்ற உடலை, நல்லுயிரைப்
பிரிக்க வந்த பெருங்கடுவே!
4
ஒடும் ஆற்றங் கரையோரம்,
உயர்ந்த நானல் தரையோரம்
பாடுங் குயில்போல் வந்தாளின்
பார்வை இரண்டும் தாமரையே!
பாடுங் குயில்போல் வந்தாளின்
பார்வை இரண்டும் தாமரையே?
நாடும் ஒவ்வா திவ்வுவமை!
நற்றீக் குறையே! பெருநரையே!
5
- 20