பக்கம்:இரவு வரவில்லை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊரெல்லாம் தூங்கிற்(று)! ஓடையோ தூங்கவில்லை!
பேரறியாப் புத்துலகம் பேசச் சலிப்பதில்லை!
வாராயோ? போனால் துன்பம் மறந்திடலாம்!
யார்நம்மைக் கேட்பார்? அதோ நிலவு வந்ததுவே!
6


கட்டில்லை! நெஞ்சிற் கவலை முளைப்பதில்லை!
எட்டியெட்டிப் போக எண்ணச் சுழலினிலே
மட்டில்லா இன்பம் வழங்கும் புதுவுலகம் !
வட்டநிலா அழைக்க வந்ததடி வாராயோ?
7








27
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/36&oldid=1179831" இலிருந்து மீள்விக்கப்பட்டது