இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2. எழுத்தாளர் கடமை
நாட்டினை விளைக்கும் வற்ற
நல்லாறு போல என்றும்
பாட்டினுல், உரையால், நல்ல
பண்பட்ட கருத்தால், சொல்லால்
தீட்டுக எழுத்தை! நாட்டைத்
திருத்துக! எழுத்தின் வன்மை
காட்டுக! இதுவே நம்மோர்
கடமையாம்! இனிது வாழ்க!
- 44