பக்கம்:இரவு வரவில்லை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடிமக்கள் கூக்குரலைக் கேட்கின்ற காதும்,
கொடுமையெனில் எதிர்க்கின்ற அஞ்சாத நெஞ்சும்,
நடுநிலைமை குன்றாத குறிக்கோளும், ஆன்ற
நல்லறிவும், அடக்கமும் வாய்த்தோரைத் தேர்ந்தே
எடுக்காத முறையாலே குடியாட்சி பாழாம்!
எவர்குற்றம்? குடிமக்கள் சீர்தூக்காக் குற்றம்!
குடிமக்கள் விழிப்புத்தான் குடியாட்சி மேன்மை!
விழிப்பிலையேல் குடியாட்சி குடியராட்சி யாமே!
4









72
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/78&oldid=1179772" இலிருந்து மீள்விக்கப்பட்டது