இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3. தங்கத் தாமரை மலர்ந்ததுவே!
பொங்கும் கடல்மேல் தலைநீட்டிப்
- புகுந்த வாடை இருளோட்டிப்
- பூவை மலர்த்தி அழகூட்டிப்
- பொன்னொளி வீசிக் கைந்நீட்டித்
தங்கத் தாமரை மலர்ந்ததுவே!
- தைமுதல் நாளும் பிறந்ததுவே!
- தைமுதல் நாளும் பிறந்ததுவே
- தமிழர்க் கின்பம் நிறைந்ததுவே!
மங்காத் தமிழர் பெருநாளாம்
- வந்த பொங்கல் புதுநாளாம்!
- வந்த பொங்கல் புதுநாளாம்
- வாழ்வ ளித்த திருநாளாம்!
எங்கும் பொன்னும் பொன்னொளியே!
- எழுந்தது:பொங்கல் வாழ்த்தொலியே!
- எழுந்தது பொங்கல் வாழ்த்தொலியே
- இல்லந் தோறும் சிரிப்பொலியே!1
குட்டை குளங்கள் பூப்பூக்கக்
- கொடியும் செடியும் காய்காய்க்கக்
- குன்றத் தருவி முழவார்க்கக்
- குயிலும் வண்டும் யாழ்சேர்க்கத்
தட்டைப் போல வானெழுந்து
- தங்கத் தாமரை மலர்ந்த்துவே!
- தங்கத் தாமரை மலர்ந்ததுவே
- தமிழர்க் கின்பம் நிறைந்ததுவே!
- 73