பக்கம்:இரவு வரவில்லை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊரூராய்ச் சென்றே

உரைநிகழ்த்த ஒப்புவரோ?

காராடும் வானக்

கவினே! கலித்தொகையே!12


தேன்பாகே! சின்னஞ்

சிறுபயலே! நீயழுதால்

நான்பள்ளிப் பாடம்

நடத்த முயல்வதெப்போ?13


நீலவிழி நீர்சிந்தி

நீயழுது கொண்டிருந்தால்

கோலக் குயில்கூசும்;

கொஞ்சு மொழிநல்லார்14


அத்தைமார் இட்ட

அழகுவிழி மைகரையும்;

சித்திமார் நெற்றியிட்ட

செம்பொட் டொளியிழக்கும்;15


அம்மான்மார் தைத்திட்ட

ஆடை நலங்குலையும்!

செம்பொன்னே! கண்ணே!

சிணுங்காதே! கண்ணுறங்கு!16


மால்யானைக் கொம்பொடித்து

மாற்றார் படைநொறுக்கிப்

கால்கடைந்து செய்த

கலைவிளக்கும் தொட்டிலிலே17


81

இ.வ. -6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/87&oldid=1179412" இலிருந்து மீள்விக்கப்பட்டது