இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஊரூராய்ச் சென்றே
- உரைநிகழ்த்த ஒப்புவரோ?
காராடும் வானக்
- கவினே! கலித்தொகையே!12
தேன்பாகே! சின்னஞ்
- சிறுபயலே! நீயழுதால்
நான்பள்ளிப் பாடம்
- நடத்த முயல்வதெப்போ?13
நீலவிழி நீர்சிந்தி
- நீயழுது கொண்டிருந்தால்
கோலக் குயில்கூசும்;
- கொஞ்சு மொழிநல்லார்14
அத்தைமார் இட்ட
- அழகுவிழி மைகரையும்;
சித்திமார் நெற்றியிட்ட
- செம்பொட் டொளியிழக்கும்;15
அம்மான்மார் தைத்திட்ட
- ஆடை நலங்குலையும்!
செம்பொன்னே! கண்ணே!
- சிணுங்காதே! கண்ணுறங்கு!16
மால்யானைக் கொம்பொடித்து
- மாற்றார் படைநொறுக்கிப்
கால்கடைந்து செய்த
- கலைவிளக்கும் தொட்டிலிலே17
- 81
இ.வ. -6