க சி . கமலையா ΧΧΧV
அம்பிகையும், மற்றத் தேவதைகளும் முன்னெழுந்தருள, கண்டோர் ம ன ம் பரவசமாம்படியா ன வைபவங்களுடன், மஹாநோன்பு ஸ்தலத்துக்கு விஜயம் செய்து அம்பிட்டுத் திரும்பிக் கோரதத்தில் ஆரோகணித்து அரண்மனைக்குள் விஜயமான காட்சிப் பெருமை யும், அக்காட்சியைக் கண்டு களித்தற்குக் கூடிய பிரஜைகளின் ஆர வாரமும் இங்கே அளவிட்டுச் சொல்லமுடியா. இவ்வாறு அரண் மனைக்குள் விஜயம் செய்ததும் மஹாராஜா அவர்கள் பூரீ ராமலிங்க விலாசத்தில் பூர் சேது பீடத்தே வீற்றிருந்து, ஆங்குக் குழுமியிருந்த பற்பல கோவில் ஸ்தானிகர்கள், வைதீகர்கள், வித்வான்கள். உத்தி யோகஸ்தர்கள், பிரஜைகள் முதலிய எல்லாருக்கும் முறையே காட்சி யளித்து அன்னோர்களால் மஹதா சீர்வாதங்களையும், வணக்கங் களையும் பெற்ற ர்கள். இவ்வாறாக, விரோதிகிருதுநா மஎ ம் வத்ஸர மஹாநவராத்திரி வைபவம் பரிபூர்த்தி பெற்றது.
மாட்சிதங்கிய நம் வேந்தரவர்கள் இம்மஹோத்ஸவ தினங் களில் அம்பிகையின் தரிசனைக்கு விஜயம் செய்த ஒவ்வொரு நாளிலும், ஸரஸ்வதி பூஜையன்று நடந்த வித்வத்ஸ்பையிலும், பிற சமயங்களிலும் ஸம்ஸ் கிருத வித்வான்களும் தமிழ்வித்வான்களும் மஹாராஜா அவர்களைச் சிறப்பித்து வாழ்த்திப் பற்பல செய்யுட்க ளியற்றினார்கள். அவற்றுள், தமிழ் வித்வான்கள் இயற்றிய பாடல் களெல்லாம் ஒருங்கு தொகுக்கப்பட்டு, சென்றவாண்டுபோலவே இம் முறையும் தனிப்புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளன. இவர்கள் பாடல் களால், பூரீ சேது ஸம்ஸ்தானத்தின் பழமை பெருமைகளும், அதனை ஆளும் அரசர் சிறப்புகளும், பிற விஷயங்களும் நன்கு விளங்கக் கூடியன. ஸ்ம்ஸ்கிருத வித்வான்கள் இயற்றிய சுலோகங்களும் இவ் வாறே தொகுக் கப்பெற்றுத் தனியாக இனி வெளியிடப்பெறும் . மாட்சிமை தங்கிய நம் சேதுபதி வேந்தரவர்கள் நீடு வாழ்க, கபம்'
புல்லானிப் பெருமானுக்குத் தேர் தந்தவர்
'பஞ்செனச் சிவக்கும் மென்கால் தேவி' என்பா ன் கம்பன் சீதையை வீரனாயினும் இராமன் அரசகுமாரனன்றோ ? தாமரை இதழ்கள் பட்டாலே சிவந்துவிடும் சீறடிகள் இராகவனுக்கு. எனினும் தந்தையின் ஆணையைத் தலைமேல் தாங்கிக் கான்வழி சென்று கல்லிலும் முள்ளிளும் நடந்தான். பொன்மானைக் காட்டிப் பெண்மானை இராவணன் துாக்கிச் சென்றபிறகு தென்கோடிக்கு வந்து சீதையை மீட்கும்போ ரில் ஈடுபட்டான். சேதுகரையை யொட்டிய பாலைமண்ணில் பகலவன் சூடேற்றிய மணற்
பரப்பில் நடந்த பாதங்கள் என் பட்டனவோ! கடற்காையில் புல்லணையில்