பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதையில் ராணி மங்கம்மாளுக்கு அடுத்தபடி நம்மைக் கவருகிற கதாபாத்திரம் கிழவன் சேதுபதிதான். மடங்கா வீரமும் பிறருக்கு அடங்கா ஆற்றலும் கொண்ட அந்தக் கிழச்சிங்கம் நம் கவனத்தைக் கவர்வதில் வியப்பேதும் இருக்கமுடியாது. நாயக்கர்கள் காலத்து மதுரை, இராமநாதபுரம், திரிசிரபுரம் பிரதேசங்களின் நிலையையும் இந்நாவலின் மூலம் காணமுடிகிறது.

இப்புத்தகத்தின் வாசகர்களுக்கு என் அன்பையும் வாழ்த்துக் களையும் கூறி விடைபெறுகிறேன்.

சென்னை-2

1–3–81.

நா. பார்த்தசாரதி