பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

95

அந்த ஆண்டின் வசந்த காலமும் வந்தது. சித்திரா பெளர்ணமிக்கு மங்கம்மாளும், ரங்ககிருஷ்ணனும் சின்ன முத்தம்மாளும் மதுரைக்குப் போய் ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்தைத் தரிசித்துவிட்டு வந்தார்கள்.

அந்த ஆண்டு கோடை வெயில் எல்லா ஆண்டுகளையும் விட மிகவும் கடுமையாக இருந்தது. திரிசிரபுரத்திலும், சுற்றுப் புறங்களிலும் அனல் பறந்தது.

அரண்மனை வளையல்காரர் ஒருவர் நல்ல மங்கலவேளை பார்த்துச் சின்ன முத்தம்மாளுக்கு விசேஷமான வளையல்களை அணிவித்தார். வளைகாப்பு வைபவத்தின்போது ரங்ககிருஷ்ணனும், ராணி மங்கம்மாளும் உடனிருந்தனர். சின்ன முத்தம்மாளின் தோழிகளும், அரண்மனைப் பெண்களும் மகிழ்ச்சியோடு கூட்ட மாகக் கூடி நின்று வளைகாப்பு அணிவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் மங்கலமான பாடல்களை இனிய குரலில் பாடினார்கள்.

"ரங்ககிருஷ்ணா! உனக்கு ஒரு மகன் பிறந்து அவன் பெரியவனாகி வளர்ந்த பின்பாவது இந்தக் கிழவன் சேதுபதியை எதிர்த்து ஒடுக்க முடிகிறதா பார்க்க வேண்டும்?" என்றாள் மங்கம்மாள்.

"இதற்கு அவசியமே இராதம்மா உலகம் உள்ளவரை கிழவன் சேதுபதியும் நித்யஜீவியாக இருப்பார் என்று நினைத்துக் கொண்டு பேசுகிறீர்கள் நீங்கள்"

"வாஸ்தவம்தான் இங்கு யாரும் சாசுவதமில்லையப்பா. ஆனால் கிழவன் சேதுபதி எமனே வந்தாலும் அவனுக்குப் பிடி கொடுக்காமல் சாக்குப் போக்குச் சொல்லி அவனைத் திருப்பி அனுப்பிவிடுவார்."

"அவர் அப்படிச் செய்யக் கூடியவர் தான் அம்மா ஆனால் காலம் வந்துவிட்டால் யாரும் தப்பமுடியாது.சேதுபதி மட்டுமில்லை; நீ நான் எல்லாரும்தான்."

“என்னைச் சொல், ஒப்புக் கொள்கிறேன். உனக்கு என்ன வந்தது? நீ வாலிபப் பிள்ளை. இன்னும் நீண்டகாலம் சிரஞ்சீவியா