பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 71 பின்னர் சிவகங்கைச் சீமையை நவாப் கைப்பற்றியது காளைய ர் கோவிலில் நடைபெற்ற போரில் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவர் வீரமரணம். சிவகங்கை ராணி, பிரதானி தாண்டவராய பிள்ளையுடன் மைசூர் மன்னர் ஐதர் அலியிடம் புகலிடம் (1772) மறவர் சீமையில் குழப்பம் நவாப் ஆட்சிக்கு எதிராக மாப்பிள்ளைத்தேவர் தலைமையில் புரட்சிக்காரர்கள் இராமநாதபுரம் சீமையில் தீவிர நடவடிக்கை (1780 மைசூர் மன்னர் ஐதர்அலியின் ராணுவ உதவியுடன் மருது பாண்டியர்கள் சிவகங்கை சீமையையும் இராமநாதபுரம் கோட்டையை மாப்பிள்ளைத் தேவரும் கைப்பற்றி ஆற்காட்டு நவாப் ஆட்சியை அகற்றியது. உள்நாட்டு குழப்பத்தை அடக்கி நிர்வாகத்தை திறம் பட அமைப்பதற்கு ஏதுவாக திருச்சிக் கோட்டை யில் சிறைவைக்கப்பட்ட சேதுபதியை விடுதலைசெய்து இராமநாதபுரம் சீமைக்கு அரசராக நவாப்அறிவித்தது. - (1781) திருச்சிக் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்க சேதுபதி மன்னரை விடுவித்து இராமநாதபுரம் சீடை மன்னராக ஆற்காட்டு நவாப் அறிவித்தது. (1781) வடக்குப் பகுதியில் புகுந்த தஞ்சை மராத்தியப் படை யை கிழவன் சேதுபதி படுதோல்வி அடையச்செய்தது. (1709) இராமநாதபுாம் சீமையை ஆற்காட்டு நவாப் கிழக்கு இந்தியக் கம்பெனியாருக்கு விட்டுக் கொடுத்தது (1792)