200 டில் ஈடுபட்டதை மிகவும் கவலையுடன் குறித்து வைத் துள்ளனர். இன்ைெரு பாதிரியாரான மார்ட்டின், மறவர் சீமை யின் வட்பகுதியில் கி.பி. 1709-12இல் சமய்ப்பணியை தொடர்ந்தவர். அவரது கடிதங்களில் 18.12.1709 தேதி மாலையில் துவங்கிய புயலையும் வெள்ளத்தையும் பற்றி விரிவாக எழுதி இருப்ப்துடன், சேதுப்தி மன்னரது அனுமதியுடன் பொன்னளிக் கோட் டையில் பெரிய தேவாலயம் ஒன்றை ஆறுமாத கால அளவில் நிர்மாணித்தது. நரம்புச் சிலந்தி நோயில்ை ஆவதிப்புட்டது. பின்னர் சேதுபதியினல் மறவர் சீமையிலிருந்து வெளியேற்றப்பட்டு அறந்தாங்கி கோட்டையில் சேது மன்னரது உறவினர் ஆதரவில் வாழ்ந்தது ஆகியவை பற்றி நீண்ட கடிதங்கள் வரைந்து இருக்கிரு.ர். கி. பி. 1724-27 இல் பேத் நாட்டவரான ஹிப் பேiciஃ. 鷺 பாதிரியார் 蔓 மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து சமயப் பணிகளை பார்வையிட்டு வந்தார். இங்குள்ள பெருந் தொகையினரான மறக்குடி மக்களைப் பற்றி குறித்து வைத்துள்ளார். தங்களது மறவர் சமூகத்தைச் சேர்ந்தவரே. மறக்குடியின்ரது மன்னராக இருந்தால் கூட மறவர்கள் வணிகத்திலும் கைத்தொழிலும், ஏன் விவசாயத்திலும் கூட விருப்பமற்றவர்களாக இருந்து வருகின்ற்னரே என வியப்புத் தெரிவித் துள்ளார். இராமநாதபுரம் கோட்டையைக் கைப்பற்றிய கும்பெனியாரின் தளபதி ஜோசப் ஸ்மித் கி. பி. 1772 ஜூன் மாதம் 8 தேதி சென்னைக்கு அனுப்பிய அறிக் கையில் இந்தக் கோட்டையில் மூவாயிரம் போர் வீரர்கள் இருந்தனர். திடீரென அவ்ர்கள் மீது பீரங் கித்தாக்குதல் ஏற்படுத்தியதால் அவர்களுக்கு என்ன செய்வது என்று நிலைகுலைந்து தடுமாறினர். மிகுந்த வீரத்துடன் போராடி மடிந்தனர். அதல்ை கோட் டையைக் கைப்பற்றுவது எளிதாகி விட்டது. அங்குள்ள அரண்மனையைப் போன்ற மாளிகையை
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/213
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை