பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 38 இராமன் - பன்முக நோக்கில் உலகம் அமைதியுற்று வாழ்வதால் இன்பத்தை அடையக் கூடும் என்பதை மனிதன் தன் வாழ்விலிருந்தே அறிந்துகொண்டான். அப்படியானால், ஏன் உலகில் அமைதி இல்லை என்ற வினாப் பிறந்தது. அமைதி கெடுவதற்குக் காரணம் முரண்பாடே என்ற முடிவுக்கு வந்தான் மனிதன். அவ்வாறாயின், முரண்பாட்டை ஒழித்துவிட்டால் அமைதி கிட்டுமே என்ற முடிவுக்கு வந்தான். முரண்பாட்டை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டான். பாவம், முரண்பாட்டை - இயற்கையில் எங்கும் நிறைந்த முரண்பாட்டை - என்றும் எங்கும் நிலைத்துள்ள முரண்பாட்டை அழிக்கப் புகுவதே ஒரு முரண்பாட்டிற்கு அடிகோலுவதாகும் என்பதை மனிதன் அன்றும் தெரிந்துகொள்ள வில்லை; உலக அமைதியை ப் போரிட்டாவது பெற்றுத் தருகிறேன் என்று இற்றைநாள் மனிதன் மார்தட்டும் நிலையிலும் தெரிந்துகொள்ள வில்லை. என்ன செய்வான் மனிதன் முரண் நீங்கினால் அமைதி கிட்டும்; அமைதி கிட்டினா லொழிய முரண் நீங்க வழியில்லை, இவ்வாராய்ச்சியில் ஈடுபட்ட மனிதன், நாய் தன் வாலைப் பிடிக்கச் சுற்றிச்சுற்றி வருவது போலச் சுற்றிச்சுற்றி வந்தான். இங்ங்னம் பல்லாண்டுகள் கழிந்தன. எவ்வாறாயினும் முரண்பாட்டை அழிக்க வேண்டும் என்ற அவனுடைய கொள்கை உறுதிப் பட லாயிற்று. இந்நிலையில் முரண்பாட்டின் அடிப்படையை ஆயத் தொடங்கினான் மனிதன். முரண்பாடுகள் என்பவை உண்மையில் முரண்கள்தாமா? கறுப்பின் நேர் எதிர்தானா வெளுப்பு? தீமையின் நேர் எதிர்தானா நன்மை தோல்வியின் நேர் எதிர்தானா வெற்றி! இவ்வாறு முரணின் அடிப்படையை ஆயத் தொடங்கியபொழுதுதான் மனிதனுக்குச் சில உண்மைகள் தெரியலாயின. முரண்பட்ட பொருள்களை எடுத்துக் கொண்டு மேலாக ஆயுமிடத்து, அவற்றுள் முரண்பாடு காணப்படினும் ஆழ்ந்து ஆயும்பொழுது அம் முரண்பாடு சிறிதுசிறிதாக விலகத் தொடங்கியது. ஒன்றி லிருந்து மற்றொன்று வெளிப்படுவதுபோலவும் தோன்றத்