பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 38 இராமன் - பன்முக நோக்கில் செந்நெறியில் செலுத்தி, அதே நேரத்தில் தீயோரை அழித்துத் தக்கவர்களைக் காத்து உதவவே இங்கு மனிதனாய்ப் பிறந்தான். எவன் தெரியுமா? தன்னிடம் சரணம் புகுகின்றவர்கள் துயரத்தை மட்டுமல்லாமல் அவர்கள் பிறப்பையே போக்குபவன். பரித்ராணாய ஸாதூனாம் வினாசாய சதுஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே பகவத்கீதை 4 - 8 என்று கீதையில் கண்ணன் கூறுகின்ற பாடலின் விரிவுரை ஆகும் கம்பனின் மேலே காட்டிய பாடல். அறத்தை நிலைநாட்டுதல் என்றாலே, மக்கள் நீதி தெரிந்து நடப்பது என்பதுதானே பொருள்! அப்படி இருக்க, இாண்டையும் கவிஞன் ஏன் தனித்தனியாகக் கூறவேண்டும் அவன் வந்த காலத்தில் அவன் ஆற்றலை நேரே காணுவதால் அறவழி நடக்கும் மக்கள், நாளடைவில் வழுக்கி விழ ஏதுவாகலாம் அல்லவா? எனவேதான், இரண்டாம் முறையாக, விரிவாக நீதித் திறம் தெரிந்து உலகம் பூணச் செந்நெறி செலுத்தி என்று கூறுகிறான். நீதித் திறத்தைத் தெரிந்துகொள்ளுதல் வேறு; அதனை ஏற்று வாழ்க்கையில் கடைப்பிடித்தல் வேறு, இராவணன் அனைத்து நீதிகளையும் பழுதறக் கற்றவன்தான்; ஆனாலும், அவன் வாழ்க்கை எவ்வாறு சென்றது? நீதியை எடுத்துச் சொன்ன வீடணன், கும்பகருணன் என்பவர்கள் பேச்சு அவன் செவியில் ஏறவில்லை அல்லவா : அதனால்தான் தெரிந்து' என்று கூறிய கவிஞன், பூண்டு செந்நெறியில் செல்ல உதவினான் இராமன், என்று பேசுகிறான். தண்டித்தலும் கருணையே உலகில் மக்கள் வடிவில் பிறந்துவிட்டவர்களில், மரங்களின் இயல்புடையவர்கள், விலங்கு இயல்புடைய வர்கள், மனம்போனபடி வாழும் சில ஜன்மங்கள் என்ற முறையில் பல படித்தரம் உண்டு அல்லவா? ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடிக் கறக்கிற மாட்டைப்