பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் திருமுறைப் பாடல்கள் 繆 li1 發。 வல்லார் விசயன் வில்அடியால் வடுப்பட் டுவந்தார் ஆனாலும் கல்லாம் முலையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவிலுமே (3) என்றும் இறவார் மிடற்றில்விடம் இருக்க அமைத்தார் என்றாலும் ஒன்று நிலையார் நிலையில்லா தோடி உழல்வார் என்றாலும் நன்று புரிவார் தருமன்உயிர் நலிய உதைத்தார் என்றாலும் கன்றுண் கரத்தாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவிலுமே (5) வாழ்வை அளிப்பார் மாடேறி மகிழ்ந்து திரிவார் என்றாலும் தாழ்வை மறுப்பார் பூதகணத் தானை உடையார் என்றாலும் ஊழ்வை அறுப்பார் பேய்க்கூட்டத் தொக்க நடிப்பார் என்றாலும் காழ்கொள் முலையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவிலுமே. (7) மான்கொள் கரத்தார் தலைமாலை மார்பில் அணிந்தார் என்றாலும் ஆன்கொள் விடங்கர் சுடலைஎரி அடலை விழைந்தார் என்றாலும் வான்கொள் சடையார் வழுத்துமது மத்தர் ஆனார் என்றாலும் கான்கொள் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவிலுமே (9) கோதே மருவார் மால்அயனும் குறியா நெறியார் என்றாலும்