பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

娜 27O 苯 இராமலிங்க அடிகள் சித்திஇன் புருவே சித்தியின் கருவே சித்தியிற் சித்தியே எனது புத்தியின் தெளிவே புத்தமு தளித்துப் பொதுநடம் புரிகின்ற பொருளே (16) கலைவளர் கலையே கலையினுட் கலையே கலையெலாம் தரும்ஒரு கருவே நிலைவளர் கருவுட் கருஎன வயங்கும் நித்திய வானமே ஞான மலைவளர் மருந்தே மருந்துறு பலனே மாபலம் தருகின்ற வாழ்வே புலைதவிர்த் தெனையும் பொருளெனைக் கொண்டு பொதுநடம் புரிகின்ற பொருளே (18) இந்த அருமையான ஐந்து பாடல்களையும் அன்புடன் ஒதி ஆனந்த நிலை எய்துவோமாக. 41. பரசிவநிலை: பத்துப் பாடல்களைக் கொண்ட இப்பதிகம் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்க ளால் அமைந்தவை. இந்தப் பரசிவ நிலையை வள்ளல் பெருமான் அகமிக மகிழ்ந்து அநுபவிக்கின்றார். பாடல் களின் கம்பீரத்தைப் பாடி அநுபவிப்போம். அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் பொருட்சாரும் மறைகள்ளலாம் போற்றுகின்ற தெய்வம் போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம் இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளும் தெய்வம் எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளும் தெய்வம் தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம் (1) இச்சைஎலாம் எனக்களித்தே எனைக்கலந்த தெய்வம் இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம் எச்சமயத் தெய்வமுந்தான் எனநிறைந்த தெய்வம் எல்லாஞ்செய் வல்லதெய்வம் எனதுகுல தெய்வம்