பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

苓 282 领、 இராமலிங்க அடிகள் எய்ப்பிலே கிடைத்த வைப்பது என்கோ என்னுயிர்க் கின்பமே என்கோ துய்ப்பிலே நிறைந்த பெருங்களிப் பென்கோ சோதியுட் சோதியே என்கோ தப்பெலாம் பொறுத்த தயாநிதி என்கோ தனிப்பெரும் தலைவனே என்கோ இப்பிறப் பதிலே மெய்ப்பயன் அளித்திங்கு என்னைஆண் டருளிய நினையே (3) அன்பிலே பழுத்த தனிப்பழம் என்கோ அறிவிலே அறிவறி வென்கோ இன்பிலே நிறைந்த சிவபதம் என்கோ என்னுயிர்த் துணைப்பதி என்கோ வன்பிலா மனத்தே வயங்கொளி என்கோ மன்னும்.அம் பலத்தர சென்கோ என்புரி அழியாப் பொன்புரி ஆக்கி என்னைஆன் டருளிய நினையே (7): மறைமுடி விளங்கு பெரும்பொருள் என்கோ மன்னும்ஆ கமப்பொருள் என்கோ குறைமுடித் தருள்செய் தெய்வமே என்கோ குணப்பெருங் குன்றமே என்கோ பிறைமுடிக் கணிந்த பெருந்தகை என்கோ பெரியஅம் பலத்தர சென்கோ - இறைமுடிப் பொருள்என் உளம்பெற அளித்திங் கென்னைஆண் டருளிய நினையே (9) அருமையான பாடல்கள். ஆழ்வார் பெருமக்கள் பாசுரப் பாணியில் அமைந்து படிப்போரின் உள்ளத் தைக் கொள்ளை கொள்கின்றன. 51. இறைவனை ஏத்தும் இன்பம்: இறைவனைப் போற்றுதலால் தனி இன்பம் அடையலாம். இதில் மூவர் தேவாரமும் மணிவாசகப் பெருமானின் திருவாசகமும் சிறந்த சான்றுகளாகும். இறைவனை ஏத்தும் இப்பதிகம்