இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆறாம் திருமுறைப் பாடல்கள் 苓 321 苯 அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய் அவ்வறிவில் விளைந்தசிவா ந்ைதஅமு தாகி உருச்சிக்கும் பரநாதத் தலங்கடந்தப் பாற்சித் துருவுகடந் திருக்கும்என உணர்ந்தோர்சொல் வாரேல் பெருஞ்சித்தெல் லாம்வல்ல நடராசப் பெருமான், பெருமையையாம் பேசுவதென் பேசாய்என் தோழி (7) வண்கலப்பில் சந்திசெயும் சத்தியமே ஒருமை வாய்கொளிமா சத்திஅத னுள் ஒருகா ரணமாம் விண்கரண சத்திஅத னுள்தலைமை யாக விளங்குகுருச் சத்திஅதில் மெய்ம்மைவடி வான எண்குணமா சத்திஇந்தச் சத்திதனக் குள்ளே இறையாகி அது.அதுவாய் இலங்கிநடம் புரியும் தண்கருனைத் திருவடியின் பெருமை,அறி வரிதேல் சாமிதிரு மேனியின் சீர் சாற்றுவதென் தோழி (25) பொற்புடைய ஐங்கருவுக் காதார கரணம் புகன்றஅறு கோடிஅவைக் காறிலக்கம் அவற்றுக் இராம. - 22