பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

案 332 案 இராமலிங்க அடிகள் என்சாமி எனது.துரை என்உயிர்நா யகனார் இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார் பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது பேர்உடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார் தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான் சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியசத் தியமே பின்சாரும் இடைமிடவாய் என்மொழிநின் தனக்கே வெளியாகும் இரண்டரைநா ழிகைக்கடந்த போதே (4) இவை யாவும் தன்நிலையில் இருந்து அடிகள் அநுபவித்தவை (1-144 வரை) 2. அகப்பொருட் பதிகங்கள் ஆறாம் திருமுறையில் அகப்பொருட் பதிகங்களா கப் பதினாறு உள்ளன. இவற்றுள் அநுபவமாலை” என்ற பகுதியை முன்னர் விளக்கியுள்ளோம். ஏனைய வற்றுள் ஒரு சிலவற்றை ஈண்டுக் காண்போம். 58. நற்றாய் கூறல்: நற்றாய் - தலைவியைப் பெற்ற தாய். தலைவி - அடிகள். இப்பதிகத்தில் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்த பத் துப் பாடல்கள் உள்ளன. பாடல்கள் யாவும் 'வரத்தி னால் நான்பெற்ற மகளே என்று இறுகின்றன.