பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

冰 64 苯 இராமலிங்க அடிகள் 31 உறுதி உணர்த்தல்: கட்டளைக் கலித்துறையா லான மூன்று பாடல்களைக் கொண்டது இப்பதிகம். அடிகள் நெஞ்சுக்கு உறுதி உணர்த்துவது. அறியாத நம்பிணி ஆதியை நீக்கும் அருள்மருந்தின் நெறியாம் தணிகையன் ஆறெழுத் துண்டு:வெண் ணிறுண்டு,நீ எறியா திரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய் குறியா திருக்கலை என்ஆனை என்றன் குணநெஞ்சமே (2) என்பது இரண்டாம் பாடல். 39. நாள் எண்ணி வருந்தல்: அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்திலான இப்பதிகம் தான் இறைவனது திருவருளைப் பெற எத்தனை நாள் செலும் என்று அடிகள் இரங்கி வருந்துதலைக் கூறுவது. இதில் மூன்று Í { fsl.— SD SS SYT : இன்னும் எத்தனை நாள்செலும் ஏழையேன் இடர்க்கடல் விடுத்தேற மின்னும் வேற்படை மிளிர்தரும் கைத்தல வித்தகப் பெருமானே துன்னும் நற்றணி காசலத் தமர்ந்தருள் தோன்றலே மயில் ஏறி மன்னும் உத்தம வள்ளலே நின்திரு மனக்கருத்தறியேனே (1) பாவி யேன்.இன்னும் எத்தனை . நாள்செலும் பருவரல் விடுத்துய்யக் கூவி யேஅன்பர்க் கருள்தரும் வள்ளலே குணப்பெருங் குன்றேளன்