பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

紫 68 笨 இராமலிங்க அடிகள் காமப் பயலைத் தடுப்பாரோ கடப்ப மலர்த்தார் கொடுப்பாரோ ஏமத் தனத்தைக் கடுப்பாரோ என்மேல் அன்பை விடுப்பாரோ மாமற் றொருவீ டடுப்பாரோ மனத்தில் கோபம் தொடுப்பாரோ தாமத் தாழ்வைக் கெடுப்பாரோ தணிகை தனில்வேல் எடுப்பாரே (6) தணிகா சலம்போய்த் தழையேனோ சாமி திருத்தாள் விழையேனோ பணிகா தலித்துப் பிழையேனோ பாடி மனது குழையேனோ திணிகான் உலகை அழையேனோ சேர்ந்தவ் வீட்டுள் நுழையேனோ பிணிக்காண் உலகில் பிறந்துழன்றே பேதுற் றலையும் பழையேனே. (9) பாடல்களைப் பக்தியுடன் பாடி அநுபவித்தால் நாமும் நாயகியின் நிலையை அநுபவித்து மகிழலாம். 37. கூடல் விழைதல்: அடிகள் நாயகி நிலையில் இருந்து ஆறுமுகத்தான்மீது காதல் கொண்டு அவ னோடு கூட விழையும் பாங்கில் ஆர்வத்துடன் கழறுவ தாக எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தயாப்பில் அமைத்த பத்துப் பாடல்களைக் கொண்டது இந்த அகத்துறைப் பதிகம். நான்கு பாடல்களில் ஆழங்கால் படுவோம். சகம்ஆ றுடையார் அடையா நெறியார் சபையார் விடையார் தனிஆனார் உகமா ருடையார் உமைஓர் புடையார் உதவும் உரிமைத் திருமகனார்