பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

缘 74 拳 இராமலிங்க அடிகள் விடலே அருளன் றெடுத்தாளல் வேண்டும்என் விண்ணப்பமீ தடல்ஏ றுவந்த அருட்கட லேஅணி அம்பலத்துள் உடலே மருவும் உயிர்போல் நிறைஒற்றி யூரப்பனே (10) இது ஒற்றியூர் அப்பனைப் பிரார்த்திப்பதாக அமைந்துள்ளது. - இப்பதிகத்தில் பொதுவாக அமைந்த பாடல்களும் நிலத்தே சிறுவர்செய் குற்றங்கள் யாவும் நினைத்தறவோர் சலத்தே உளத்தை விடார்என்பர் ஆதலின் தாதையென்றே குலத்தேவர் போற்றும் குணக்குன்ற மேளங் குலதெய்வமே புலத்தே இழிதகை யேன்.பிழை யாவும் பொறுத்தருளே (3) என்பது இதற்கு ஒர் எடுத்துக்காட்டு. 3. பெருவிண்ணப்பம்: பொதுவாக அமைந்த பாடல் கள். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தயாப்பில் அமைந்தவை இப்பத்துப் பாடல்கள். உண்மை அறியேன் எனினும்எனை உடையாய் உனையே ஒவ்வொருகால் எண்மை உடையேன் நினைக்கின்றேன் என்னே உன்னை ஏத்தாத வெண்மை யுடையார் சார்பாக விட்டாய் அந்தோ வினையேனை வண்மை உடையாய் என்செய்கேன் மற்றோர் துணைஇங் கறியேனே (2)