பக்கம்:இராவண காவியம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 இராவண காவியம் 80. மாலை தொடரும், அளியோட்டும், மலர்க்கை கொண்டு முகந்துடைக்கும், காலை நிலத்தே நனிதேய்க்கும், ' கண்ணை யுறுத்துங், கையுதறும், மேலை யாடை தனைத்திருத்தும், விம்முங் கனைக்கும் இவ்வாறு பாலை நிகர்க்கு மொழியாட்குப் பறிப்பி னுரைப்பான் குறிப்புரையே. 81. தண்ண ஞ் சுனை யின் நீராடுந் தகையள் போல நடுக்குற்றே உண்ணுங் கரும்பி னிருகைகள் உயர்த்தி முயங்குங் குறிகாட்டும், வண்ணந் துவரென் றுவமிக்கும் வாயோ திமங்கண் டஞ்சுநடைப் பெண்ணு நம்மைப் பிரிகில்லாப் பெய்கீர் போலு மு.ணர்வினளே. 82. என்னை நோக்கா தியானோக்க இருகண் கொண்டு நிலனோக்கும், பொன் னி னன்ன நுதல்வியர்க்கும், புறந்தோன் முதுள் ளேசிரிக்கும், தன்னின் உள்ளச் சி:ைதவடக்கும், தகைய மடமைக் குணமுடையாள்; இன் னு மென் ன இதிலையம் இன்றே வாழ்வை வென் றேனே. 80. பறிப்பு-வெளிப்பாடு. இது, தலைவன் குறிப்புரை கள 3-5. 81. இது, தலைவக கூ ம் ம. முயங்குதல்- கூடுதல். ஒதி மம் - அS சோ ம். பெய்ரேபேர்ல உணர்வு - புதுக் குடத்திலூற்றி) நீர் கசிதல்போல உனளக் குறிப்பை வெளிக்காட்டுதல், இது, தலைவி குறிப் புரை , கள வு-27. 82. இது, கூட்டல் விருப்பம். களவு-6, மடமை-சொன் அதைக் கொண்டு அதை வெளிக்குக் காட்டாக பெண்மைக் குணம. 82, 83, 85, 87 பாட்டுக் களில் முறையே மெய்ப்பாட்டி யல் 15, 14, 16, 16 சூத்திரங்களில் கூறப்படும் 15 மெய்ப்பாடுகளும் வருதல் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/144&oldid=987639" இலிருந்து மீள்விக்கப்பட்டது