பக்கம்:இராவண காவியம்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. நகப்பெறு படலம் 205 இசைபெறு வேள்விக் காக இயற்றியவ் விடை யி னிற்கும் திசைதொறுஞ் சென்று மீண்ட, சிறந்தவாண் குதிரை தன் னை வசையறு கர்வாள் கொண்டு கோசலை யென் னு மானும் விசைகொடு மூன்று வெட்டில் வெட்டியே வீழ்த்தி னாளே. 21. விழுமிய கதிர்வாள் கொண்டு வெட்டியே வீழ்த்தப் புட்ட கொழுவிய குதிரை தன்னைக் கோசலை' யந்தக் கங்குல் முழுமையுங் கணவ னோடு முயங்கிடு முறையே போலத் தழுவியே கழித்தாள்; மற்றைச் சடங்கெலா முடிந்த பின்ன ர், 22. வெட்டிய குதிரை யோடு வேறுபல் குதிரை தம்மை வெட்டியே காய்ந்த நெய்யில் வேகவைத் தெடுத்து நன்னெய் சொட்டிடப் பகிர்ந்தெல் லோரும் சுவைபட. மென்று தின்று அட்டிய சோமக் கள்ளை யருந்தியே களித்தா ரம்மா! ஆங்குள முந் நா றாவும் ஆடுபன் னுறும் பாம்பும் தேங்குநன் னீர்வாழ் யாமை முதலிய சிலபன் ஊறும் தூங்கிறைப் பறவைக் கூட்டத் தொகைவகை விரியிற் கொன்று பாங்கொடு பொறித்துத் தின்று பருகினார் சோமக் | கள்ளும். 24. இங்ஙனம் பலநாள் செல்ல இருந்தவர் புலவுங் கள்ளும் நுங்கியே களித்தார்; வேள்வி நானெறிப் படியே மன்னன் மங்கைமூ வரையும் வேள்வி வகுத்தவா சான் மூ: வர்க்கும் அங்கையிற் பிடித்து வேள்விக் காணிக்கை யாகத் தந்தான். 23. அக்.,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/231&oldid=987732" இலிருந்து மீள்விக்கப்பட்டது