224 இரான கான்யம் 10. செய்தவ மறைமுனிச் செல்வ! கேட்டிடும் செய்தியொன் றுண்டெனச் செப்பு கென் றலும் உய்தியி லொருவருக் குயர்ந்த செம்பொருள் எய்திய மக்கவென் றியம்பு மாமறை. 11. நற்றவ முன்னொரு நாளிச் சோலையைச் சுற்றியான் வருகையில் தோகை யாவளோ பெற்றுவைத் தகன்றபெண் பிள்ளை யொன்றைக்கண் ணுற்றீரு கையினு முவந்தெ டுத்தனன். 12. போ தலர் காவிலோர் செடியின் பொன் னிழல் ஊதியம் பெறநில முழுத வேர்ப்படைப் பாதையி லொருகொடி பயந்து வைத்ததால் சீதையென் றழைத்தனன் பொருளுஞ் சேரவே. இளமதி போன்றவவ் விளங்கு ழந்தையை உளமகிழ் வொடுவளர்த் தோம்பி வந்தனன்; குளமலர் தாமரை குவியப் போந்திடும் வளர்மதி போலவள் வளர்ந்து வந்தனள். பூவையுங் கிள்ளை யும் புலம்பப் பாடியும், காவினுங் குளத்தினுங் களிப்ப வாடியும், ஓவியஞ் சுவைகெட வுருவங் கூடியும் பாவையுந் திருமணப் பருவ முற்றனள். 15. மின் பகை யெனத்திரு மேனி” வாய்ந்தவர் பன் மல ரெனம ணப் பருவ மங்கையும் மன்மக ளாகியும் மணப்ப ரில்லரால் என் மனக் கவலைக்கோ ரிருக்கை யாயினாள், 16. தெண்டி ரை யுலகினில் திருவு மாண்மையுங் கொண்டவென் குடிக்குயர் கோதை யாகியும் கண்டெடுத் தவளெனக் கண்ட மன்னர்கள் வண்டணி குழலியை மணக்க வந்திலர். !a, ஏர்பபடைப்பாதை - உழுபடைச்சால். சீ ைத-உழு படைச்சால்.
பக்கம்:இராவண காவியம்.pdf/250
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை