பக்கம்:இராவண காவியம்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HS தமிழகம் புகு படலம் 11. அம்மு சிவனி ருக்கை யகன்றவர் செம்மை யின்றி யுயிர்கொன்று தின்றுமே இம்மை யின்ப மிதுவென வின்புரீஇ அம்ம லையை யகன்று வழிக்கொடு. 12. தண்ட மிழகந் தன்னை யடைதரக் கண்ட வாரியர் கண்கள் களிமடங் கொண்டு மேவர வேற்றுக் கொடுசெலீஇ உண்டு நன்புல வுள்ள மகிழ்ந்தனர். 13. ஆங்கு சில்பக லன்ன ரிருந்துபின் நீங்கி யாயிடை நீடிய கானிடை ஓங்கு மென்பிடி யோடிரு மால்கரி பாங்கு செல்லுதல் போலப் படர்ந்தனர். 14. புனல்ம லிந்த புனத்திடைச் செல்கையில் கனித மிழ்மகன் கண்டு முனிவர்க்கு மனைவி வேண்டுமோ? மாது மொருத்தியே! முனிவ ரென் றியான் மோசம்போ கேனெ னா. 15. தடுக்க வந்தத் தறுதலை ராமனும் வெடுக்கென் றம்பை விடுத்துயிர் போக்கியவ் விடத்தை வீட்டுப்பி னேகிச் சரபங்கன் இடத்தை யண்ரி யினிதுண் டிருந்தனர். சிலையி ராமனத் தீய சரபங்கன் நிலையி ருக்கவந் நீடிய கானுயிர் உலைய வேட்டவ ணுள்ள முனிவர்கள் சிலைவ லானிடம் சேர்ந்து திரளுற. வாழ்க மாமனை யாளொடு மைந்தநீ, சூழ்க நன்னலம் தோன் றிய வெம்பSை வீழ்க வெந்துய ரோடிகல் வென்றுமே வாழ்க வென்றவர் வாயுற வாழத் தியே. 16 17. 14, தவக்கோலத தால் முனிவரென் று கொண்டான். இவன் விராதன் என்னும் அரக்கன் எனக் கூறப்படுபவன். 16. தறுதலை-கெட்டவன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/299&oldid=987814" இலிருந்து மீள்விக்கப்பட்டது