பக்கம்:இராவண காவியம்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 44. ஆயிடை யகன்று சுதீக்கணன் காட்ட அகத்தியன் குடிலினை நாடித் தூயவக் கானத் திடைவள ருயிர்கள் துடித்திடக் கொன்றுதின் றருகில் மேய்பல் வளமுங் கண்டிடை யுள்ள முனிவர்கள் விழைவுட னனுப்பப் போய்கத் தியனைக் கண்டுமே வணங்கிப் புக்கிருந் தனனகத் தியனும். 45. செந்தமி ழகத்தில் நம்மவர் வேள்வி செய்துமே யுண்டினி திருக்க உந்தைமு னெதிர்த்த தமிழரை யொறுத்தே யுறுதுணை புரிந்தன னதுபோல் மைந்தர் யுந்தை மரபினை விளக்கி வண்டமிழ்த் தலைவரை யொழித்தே நந்தமர்க் கீங்கு தலைமைவாழ் வதனை காட்டுத லுன் றலைக் கடனே. 48. அடிக்கடி வந்துற் கா வன செய்வேன் ஆயிடை வாழ்கருஞ் செய்வர் முடிக்கும் வழியுங் கூறுவர் தமிழர் முறைகெடச் சூழ்ச்சியும் புரிவர் இடிக்குர லிளைஞர் கரவிடை வாழ்வர்; ஈங்கிருந் தணிமையி லுள்ள குடிக்குயர் பஞ்ச வடியெனு மிடத்தைக் குறுகியே யினிதுவாழ்ந் திருப்பீர், 47. என்றகத் தியனு மின்னன பலவு மெடுத்துரைத் தேயிரா மனுக்கு வென்றிவில் லொன்றும் அம்பறை யிரண்டும் விழைந்துள் மகிழ்வொடு கொடுத்துச் சென்றுமே வருக வென விடை கொடுப்பத் தெளிபுனற் கோதைபோ திடத்தே ஒன்றிய பஞ்ச வடியினி லிருந்துங் குவந்துவஞ் சகம்புரிந் திருந்தான். 47. கோதை.கோ தா விசியாறு. மூன்றாவது விந்தக் காண்டம் முற்றிற்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/304&oldid=987809" இலிருந்து மீள்விக்கப்பட்டது