பக்கம்:இராவண காவியம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விரம்

3


14.குன்று மாரியக் கொள்கை மறுத்தெதிர்

நின்று தாழ்ந்த நிலைமையை யெய்தியும்

குன்றி யேனுந்தங் கொள்கையை விட்டிடா

வென்றி மேதமிழ் வீரரைப் போற்றுவாம்.


15.கள்ள ரென்று மறவரென் றுங்கடைப்

பள்ள ரென்றும் பறையரென் றும்பழித்

தெள்ள நொந்து மியல்பிற் றிரிகிலா

மள்ள ராந்தமிழ் மக்களைப் போற்றுவாம்.


16.ஒருது ளிகடு வுண்ணினும் பால் கெடும்

பொருளை யாய்ந்தயற் புன்மையைப் போக்கியே

பெருமை வாழ்வு பெறுதற் கவாவியே

வருத னித்தமிழ் மக்களைப் போற்றுவாம்.


புலவர்


17.பலது றைத்தமிழ்ப் பாட்டு முரையுஞ்செய்

துலக மின்புற வோதியுந் தாய்மொழிக்

கலகி லாததொண்டாற்றிய முத்தமிழ்ப்

புலவர் பொன்னடிப் போதை வணங்குவாம்.


18.மூப்பி யன்றநம் முன்னவர் வாழ்விய

லாப்ப யின்ற வொழுக்க மனைத்தையும்

யாப்பி யற்படி நூல்செய் தனித்ததொல்

காப்பி யப்பெரி யாரைக் கருதுவாம்.


வேறு


19.இக்கதைக் கடிப்படை யிவைக ளாமென

அக்கறை யொடுதமிழாய்ந்து கண்டுமே

தக்கசெந் தமிழ்வளர் தந்தை தாயராம்

ஒக்கலைத் தமிழ்வள ருளத்தி ருத்துவாம்.


14. குன்றும்-இழிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/31&oldid=1196003" இலிருந்து மீள்விக்கப்பட்டது