பக்கம்:இராவண காவியம்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமாச்சி 15. மங்கையர் வந்தா ரில்லை, மறவர்முன் னின்ற ரில்லை, எங்கைமீ ரென்ற போழ்தத் திறைவியே, னென்றா ளில்லைச், செங்கைவேல் தந்தா ரில்லைத் தீயவ ரெம்மோ ரென்றே எங்கையே யெம்பி யேநீ ரெங்களை மறந்திட் டீரோ? 18, குற்றமே யுருவ மான குணமிலாக் கொடியோன் கூந்தல் பற்றியே யிழுத்துத் தள்ளிப் பண்பொடு மணந்து வாழ்க்கை உற்றவ ரன்றிக் காணா வுறுப்பினை யறுத்த போது பொற்றொடீ! யெவ்வா றேங்கிப் புலம்பிநீ துடித்திட் டாயோ? 17. செருக்களத் தொருவ னாகிச் செங்கைவேற் படையின் முகி தெருக்கென வெறுங்கை யோடு நிற்கவீ விரக்க மில்லான் வெருக்கெனக் கழுத்தை யீர வெங்கணை யதனை யந்தோ பொருக்கென விடக்கண் டுள்ளம் புகைந்துநொந் தினைந்திட் டாயோ. 18. தகையிலா னுதைத்துக் கீழே தள்ளிவா ளுருவி யெட்பூம் பகையினை யிள நீள் வள்ளைப் பாசிலை தன் னைக் கோங்க முகையினை யறுத்த போது முருக்கிதம் திறந்தா . வென்றெல் வகையுடல் புதைய தைத்தே மனந் துடி துடித்திட். டாயோ? 19. அடங்கவே படை. க ளெல்லா மழிந்துமே தனிய னாகி நெடுங்கள் நிற்கக் கண்டந் நெறியிலான் கடிதி னெய்த கடுங்கணை சுருக்கென் றுந்தன் கழுத்தினாற் பட்ட போது நடுங்கியைம் புலனுஞ் சோம்பி நலிந்துமெய் மறந்திட் 'டாயோ? 17. நெருக்கென - திடத்துடன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/324&oldid=987819" இலிருந்து மீள்விக்கப்பட்டது