பக்கம்:இராவண காவியம்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

989 செம்கோட் கடகம் 20. முன்னொரு காலை யானு முறைசெய்வான் சென்றபோது தன்னிகர் விந்த நாட்டித் தறுதலை தந்தை தன் னை வெந்நிடத் துரத்தி னேனவ் விறலிலான் மகாரை யேவி என்னருந் துணை 47 ருங்கட் கிறுதிசூழ்ந் தானே போலும். 21. கொல்லியே யுயிரை யூனுண் கொடியவர் நேர்மை' யில்லாப் புல்லியர் வஞ்ச நெஞ்சர் பொருந்தியே யிருந்து வாழும் அல்லிலை நெடுவே லேயவ் வாரிய மென் னும் பேரை இல்லையென் றாக்கி டாயேல் இனியுனைத் தொடாதென் கையே. வேறு 22, எந்தைக் கொருபெண் ணெளியார்க் கியல்கைத்தாய் செந்தமிழின் செல்வி திருவறத்தின் பூஞ்சேக்கை வந்தெனக்குப் பின் பிறந்த மாறா வுடன் பிறப்பி எந்தநா ளம்மா வெதிர்கண் டுவப்பேனோ? 23. தானைத் தலைவர் தமிழ்கற் றுணர்ந்தோனே வானைப் புறங்கண்ட வள்ளல்வளச் செங்கரனே! ஊனை'த்தின் றானைப் பெருக்கு முதவாரைக் கானத்தே போக்கவிரு கண்கொண்டு பார்ப்பேனோ? 24. பொன்னஞ் சிலம்பு புலம்பப் புனமயில் போற் பின்னற் புறமசையப் பெண் மயிலார் பின் றொடர் அன்ன நடைநடந்தென் னண்ணாவென் றென்முன்வர என் னிருகண் கண்டே யினிக்களித்தல் கூடுங்கொல்! 25, கேள்வாய்ச்சொல் மாறாக் கெழுதகையோய்! கேளல்லார் நாள் வாய்ப்புத் தாளா கனிவெஞ் சினமறவா! ஆள்வீச்சுக் காயிரம்பல் லாயிரமண் ணாகிடச்செய் வாள்வீச்சைக் கண்டு மகிழ்வ து உங் கூடுங்கொல்! 20. வெந்-முதுகு-மகா ர்-மக்கள். 22, சேக்கை-படுக்கை, இருக்கை. 25. கேன் - தம்மவர். வாய்ப்பு இருக்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/325&oldid=987818" இலிருந்து மீள்விக்கப்பட்டது