பக்கம்:இராவண காவியம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகப் படலம்

13


34.பன்றியி னினமுறாப் பரணங் காப்பருஞ்

சென்றற முதிர்தினைக் கதிர்கொய் செம்மருங்

கன்றிய வள்ளியின் கிழங்கு கன்னருங்

குன்றெதி ரொலிபடக் குறிஞ்சி பாடுவர்.


35.கிளிகடி பரணிடைக் கிளவி வேட்டவன்

குளிர்நிழல் வேங்கையிற் குரவை யாடிடும்

அளிமுரல் குழலியி னளகத் துண்மறை

ஒளிமுக மதியினை யுருவி நோக்குமால்.


36.அடுப்பிடு சாந்தமோ டகிலின் நாற்றமும்

துடுப்பிடு மைவனச் சோற்றி னாற்றமும்

மடுப்படு காந்தளின் மணமுந் தோய்தலாற்

கடைப்படு பொருளெலாங் கமழுங் குன்றமே.


37.தண்டமி முகமெனுந் தாயின் மங்கலங்

கொண்டணி விழவயர் குறிச்சி முன்றிலிற்

றொண்டக முழங்கிடத் தோலின் யாக்கையர்

கண்டெனு மொழிச்சியர் களிப்ப வாடுவர்.


38.சந்தன முன்றிலிற் றங்கை பாவையை

மந்திகை செய்துள மகிழச் செய்யுமால்;

குந்தியே கடுவனுங் குழந்தை முன்மட

லந்திகழ் கிலுகிலி யாட்டித் தேற்றுமால்.


வேறு

39.தேனுந்தினை மாவுந்தொகு தெளிவுந்தெளி தேனை

மானுஞ்சுனை நீருங்கழை யோடைவன மடையும்

கானந்தரு கிழங்கும் பல களியுங்கனி மொழியார்

ஏனந்தனி லேநந்திட வினிதாவிருந் தயரும்.



34, கன் று தல்-முதிர் தல், கல் நர்--- ேதாண்டுவோர்.

85, அளி-வண் டு. அளகம்-மயிர், 36. சி.#ந் தம்-

சந்தன மரம். ஐவனம்-மலைநெல், 37. குறிச்சி--குறிஞ்சி

நிலத்தூர், தொண்டகம்-குறிஞ்சிப்பறை. 38, மடல்-

ஒலை. கிலுகிலி- கிலுகிலுப்பை , 39, தெளிவு-கனிச்

சாறு. கழை-மூங்கிலரிசி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/41&oldid=1224231" இலிருந்து மீள்விக்கப்பட்டது