பக்கம்:இராவண காவியம்.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் காண்பர் 43. வேலும் வேலும் மிகைத்தெதிர் வீசினர் கோலுங் கோலுங் குறிப்பினி லெய்தனர் தோ லுந் தோலுந் துளைப்பட வேந்தினர் சாலுஞ் சாலுமென் றெண்ணுந் தறுகணர். 44. வெம்பும் வெம்பும் மிடலுடை. வீரரெய் அம்பு மம்பு மழன்றெதிர் மண்டிடும், பம்பம் பம்பும் பரிக்குலங் கோடெனுங் கம்புங் கம்புங் கனற்றுங் கரிக்குலம். 45. தேருந் தேருந் திசைதிசை மோதலான் ஊரு வோரு முறுகருஞ் சாய்ந்துகு சோரி சோரும் தொறுந்தொறும் வாய்திறக் தோரி யாவலோ டுண்ண வண் ணாருமே. 48. உருளை வீசி யுறுத்தெழு வார்புவிக் குருளை போலக் கொதித்தெழு வார்பகை மருளை நோக்கி மடங்க லெனச்சினர் திருளை நோக்கு மிரவிபோல் நோக்குவர். வாளை வீசி வருத்த வெதிர்வரும் ஆளை வீசி யடி.க்குங் களிறுகள் தோளை வீசித் துறையிற் றுணிகளை வேளை வீசி வெளுப்பவர் போலுமே. 48. வில்ல டிப்பவர் வேலி லிடிப்பவர் மல்ல டுப்பவர் வாளி னொடிப்பவர் கொல்ல டுப்பவர் கூடக் களிற்றினம் நெல்ல டிப்பவர் நேர வடிக்குமே. 48. கோல். அம்பு, தோல் கேடயம், சாலும் தகும், 44. மிடில்-வலி. அ ழன் று - தீப்பறந் து. சோடு-யானைக் கொம்பு. சம்பு-தடி, கனற்றும் தீப்பற்றச் செய்யும். 46, ஊருவோர்-பாகர். ஓரி- நரி, குறுக்ர -குட்டி, மருள -வெறி. 8. வேளை-ஏற்றகாலம். : பல்-கற்போர், கொடித்தல்-கொல்லல். கோ-போல,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/446&oldid=987968" இலிருந்து மீள்விக்கப்பட்டது