சமும் பொய் படலம் 75. இன்ன வா றங் கிருபடை வீரரும் மன்னி நின்று வலிந்து பொருதனர்; அன்ன காலையவ் வாரிய ராமனும் பின்ன னோடு பெருங்கள மேயினான். 76. படங்க லென்ன மணித்தமிழ் மள்ளர்கள் திடங்கொண் டண்மித் திறலொடு தாக்கினர் கடுங்க ணாளர் கணைகொடு மள்ளரை ஒடுங்க வைத்தன ருள்ளுடைக் தொல்கினர். 77. குருதி யாடிக் குவிபிணக் காடணர் பரவை போலப் படர்செங் களத்தினைப் பரிதி காணப் படாதெனச் செல்லவே இரவு வந்த தினுங்கொலு வேளெனா. 8. இரவுப் போர்ப் படலம் (சேயோன்) 1. பகலை வென்று பனிப்பாகை யென் றுபேர் புகல் நின்ற புகழொடு போதுரி அகல வென் றுல காள வவாவுடன் இகல நின்ற விருள்வந் தடைந்ததே. 2. தூதர் வந்து சொலப்படை யாளரைப் போதி ரென்னலே போய்ப்பொரு தேயவர் ஏதி லார்விடு மேவி வழிந்தனர்; ஈத றிந்துசே யோனு மெதிர்ந்தனன். ஏவுக் காயீர மாயிர மென்னவே சாவுக் காகச் சமைதர வாரியர் ஆலிக் காக வடுகளம் பாழ்படச் கூவிக் கொண்டு குலைகுலைத் தோடினர். 4. நிலவு லாவிய கிண்மதி வெண்குடை இலகு செந்தமி ழேந்த விசையொடு விவகி லாது விளங்கிட வேதமிழ்ப் புலவர் கூடிப் புதுக்களம் பாடினர். 77. அனர்தல்-மெல்கோக்கியெழுதல், பாவை-கடல்,
பக்கம்:இராவண காவியம்.pdf/451
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை