பக்கம்:இராவண காவியம்.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 39. 38. வேய்முத்தஞ் செந்நெல் விளைமுத்தம் வெண்சங்கத் தாய்முத்தந் தண் கார் தருமுத்தம் பூங்கமுகச் சேய்முத்தம் வேண்டேனென் செல்வச தமிழ்பயில்செவ் வாய்முத்தம் தந்து மகிழ்விக்க மாட்டாயோ ! ஓகை யொடுமறவ ருற்றுடலுஞ் செங்காத்துக் காகங் கழுகு களித்துண்ணக் கைசெய்வான். பாகுபாடும் பாவைப் படைவெட்டி. வாளேந்தி வாகை புனைந்து வரக்கண் டுவப் பேனோ! 40, வெம்பிடா தீங்கு விளையாட. நீவந்தால் தும்பிலீ யாடித் துடைப்பே னுடற்களங்கம் நம்புநீ யென்று நவின்றுசிறு கைகாட்டி. அம்புலீ வா வென் றழைத்துவக்கக் காண்பேனோ! 41. துறைப்பட்ட செந்தமிழ்வாய்த் தோழ ருடன் கூடி நிறைப்பட்ட பொற்சதங்கை நின்றொலிப்ப நில்லாது முறைகெட்ட தெவ்வீர் முதுகிட்டோ டீரென்று பறைகொட்டி நீயாடப் பார்த்துவக்க மாட்டேனோ! 42. தெற்றி யிவர்ந்தேறிச் சில்லோ திக் கிண்கிணியார் முற்றி விடைமுகத்தை மூடி முணுமுணுப்பக் கொற்றச் சிறுவருடன் கூடிக் குறுங்காலாற் சிற்றில் சிதைத்துச் செருக்கிவரக் காண்பேனோ ! 43. கடையுண்ட. செச்சை கலகலப்பக் கால்பெயர்த்துத் தொடைவண்டு பாடத் துணைவர் புடைசூழப் படையுண்ட வுண்கண்ணார் பார்த்துவக்க வேதெருவில் நடைவண்டி யோட்டி வர நான் கண் டுவப்பேனோ! 38, வேய்- மூங்கில். சங்காகிய தாய். சேயாகிய முத்தம். 89, கைசெய்தல் - பழகுதல். பாகுபடும் - பலவகைப் படும். 40. அம்புலி-சந்திரன், 42, தெற்றி- திண்ணை . சில் குளிர்ந்த. ஓதி - கூந்தல். கிண்கிணி ச தங்கை. முற்றில்-சிறுமு றம். சிற்றில் மணல்வீடு. 48. செச்சை-சீதங்கை, தெரிடை-மாலை. புடை -வான், வேல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/478&oldid=987999" இலிருந்து மீள்விக்கப்பட்டது