பக்கம்:இராவண காவியம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராவண காவியத் 8. பொல்லாரைக் காணினுஞ்செம் பொன்முதலாம் பொருள் சிறிதும் இல்லாரைக் காணினுமே யெத்தொழிலும் தெரியாத புல்லாரைக் காணினும்பால் பொருந்தியவாண் பெண்ணிலொரு கல்லாரைக் காணாராய்க் கற்றுநல முற்றாரே. 4. மனத்தானும் பிறர்பொருளை வெளவாராய் வறியோருக் கெனைத்தானுந் தினைத்தேனு மீத்துண்டு தமைச்சூழும் இனத்தாரி னினத்தாரா சீடர்காணப் படி வாழ்ந்தார் தனைத்தானே நிகராகுந் தமிழ்த்தாயின் றலைமக்கள். சான்றோரி னுறுதிமொழி தலைக்கொண்டு சான்றோரை சன் றேரின் படிபேணி புன்றவிரு மக்களையும் சான்றோரென் றுலகேத்தத் தாமாக்கிப் புகழ்பூண்டார் வான்றோயு மலையாறு வளஞ்செய்யுந் தமிழ்நாடர். 6. இன் னாத வெவ்வுயிர்க்குஞ் செய்யாதே யெவ்வுயிரும் பொன் னேபோ லருள் பூத்துப் புறந்தந்து புகழ்பூத்தார் கொன்னாளுங் கலஞ்செலுத்திக் குடயவனப் பெருவணிகர் பொன் னாடிப் பொருணாடிப் புகலாகும் புகழ்காடர். 7, நலக்குறையே வலக்குறையா நற்குண நற் செய்கை தமக் இலக்கியமாய் வழிவருவோர்க் கிலக்கண மா யெனைத்தொன்றும் சொலக்குறையா மனை வாழ்க்கைத் துறையின்று முறைவாழ்ந்தார் இலைக்குறையென் றெனை வளமு மினிதமைந்த வியனாடர். 8. பொருவிலே மெனப்போந்த பொருளிலரை யெள்ளுதலும் திருவிலே மெனக்குறைவு சிந்தையிடைக் கொள்ளுதலும் வெருவிலே யகன்றோட வேற்றுமையற் றேவாழ்ந்தார் கருவிலே திருவுடைய கவல்காணாக் கலைநாடர். 2. பிற-பிறவுயிர், 8. புறந்தருதல்-காத்தல். கொன்- மிகுதி. 7. 6லக்குறை-தலம். வலக்குறை-வலி. 8. பொருவு-ஒப்பு. வெருவிலே-அஞ்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/58&oldid=987574" இலிருந்து மீள்விக்கப்பட்டது