பக்கம்:இராவண காவியம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவழிச் சட்டம் 21. உண்டியை யுண்ணார் பொன்பட் டுடையினை யெண்ணார் கன்னற் கண்டினைப் பேணர் செம்பொற் கலன் களைப் பூணார் வண்ணச் செண்டினைச் சூடார் சாந்தத் திரளினை நாடார் யாழின் தண்டினைத் தீண்டார் யாரும் தமிழ்மொழி பயிலாக் காவே வேறு 22. பாடுபவ ருக்குமுரை பண்ணுபவ ருக்கும் ஏட துவி ரித்துரை யிசைப்பவர் தமக்கும் நாடுநக ரோடவர் நயப்பவை கொடுத்தும் தேடிவரு வீத்துமுயர் செந்தமிழ் வளர்த்தார், 23. சொற்சுவை யடுத்தொளிர் தொடைச்சுவை நிறைந்த நற்சுவை யுடைப்பொரு ணலச்சுவை செறிந்த பற்சுவை படச்செயுள்செய் பாவலர்கொ லப்டொன் சிற்சுவை கொடுத்துய ரியற்றமிழ் வளர்த்தார். 24. மண்ணுமுழ வோடுகுழல் கூடுதரு யாழின் எண்ணொடு கலந்திலகு மேழிசை பொருந்தப் பண்ணொடு திறந்தெரிபு பாடுமவர் கொள்ள எண்ணிய கொடுத்துய ரிசைத்தமிழ் வளர்த்தார், 25. உண்ணிகழ் கருத்தவ ருறுப்பிலிடை தோன்ற எண்வகைய தாயவிற லேயவுய இன்பம் நண்ணிட நடிக்குமவர் நாடுவ கொடுத்துக் கண்ணியம் தாகநடி கத்தமிழ் வளர்த்தார். 91, செ எண்டு-பூச்செண்டு, * சந்தத்திரள் -சந்தன க்கலவை. 29. பொன் இன் சுவை-பொன் னாகிய இனியசுவை. 24. மண் ணு தல்-சீர் செய்தல். முழவு-மத் தளம். எண். நரம்பின் ஓசையளவு. ஏழிசை - குரல், துத்தம், கைக்கிளை விளரி, தாரம், இளி, உழை. 95. விறல்-மெய்ப்பாடு. மெய்ப்பாடு எட்டு 1-ம் பாட்டில்காண்க. ஏய-பொருந்த.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/67&oldid=987565" இலிருந்து மீள்விக்கப்பட்டது