பக்கம்:இராவண காவியம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராவண காவியம் 26, தென் மதுரை குடி புகுந்த செய்யதரிழ்ப் பாண்டியனும் தன்மையுட னேயிரண்டாஞ் சங்கமது தான் கண்டு நன்மையொடு தமிழாய்ந்து நன்னூல்கள் பல செய்து முன்மையிலும் பன் மடங்கு முறைபுரந்தாங் " கினிதிருந்தான். 27. அடைக்கழகத் தலைநகரை யலைமூடப் புதிதாக இடைக்கழகங் கண்டாரவ் விடந்தனையுங் கடல்கொள்ளக் கடைக்கழகங் கண்டதனாற் கலைத்தமிழின் பெருவளர்ச்சி உடைக்கழகம் தொடர்பு/கலா தொருங்குநடை பெற்றதுவே. 28. தந்துவைத்த வொருபொருளைத் தான் கொள்ளு மாறேபோல் வந்தடுத்துத் தீயாழி வாய்க்கொண்டு போயதன் பின் இந்திரத்தை யினிதாண்டன் றிருந்தபெருந் தமிழ்ச்சோழன் செந்தமிழின் மணங்கமழுந் திராவிடம்புக் கிருந்தனனே. 29. பூண்டசுவை யதுகண்ட பூனையுறி யுறியாகத் தாண்டுமெனு முதுமொழிபோற் றமிழ்சுவைத்த பாழ்ங்கடலும் ஆண்டதுவேம் நூற்றின் முன் னரைகுறையா வுள்ளதுங்கொண் உண்டுள்ள வளவினநாட் டிடஞ்சுருங்கச் செய்ததுவே. 80. எத்தனையோ வகப்பொருணூ லெத்தனையோ புறப்பொருணூல் எத்தனையோ விசைத்தமிழ் நூ லெத்தனையோ கூத்தியனூரல் எத்தனையோ விலக்கிய நூ லெத்தனையோ விலக்கண நூல் அத்தனையுங் கொள் கடனி யறிவுபெறாக் கழிமடமேன் ? 31. மணிமலையெங் கேகுமரி மலையொடுபன் மலையெங்கே அணிமிகுபஃ றுளிகுமரி யாறெங்கே யவ்வாற்றால் பணிபறியாப் பெருவளந்தென் பாலியொடித் திரமெங்கே உணியெனலே யுறிஞ்சியநீ ஓகெடுவாய் கொடுங்கடலே. 29, முன்-கம்முன், 31. பணிபு அறியா - குன்றா த. உணி-ஆடுமாடுகளைக் கடித்துக் குருதியை யுண்ணும் ஒருவகைப்பூச்சி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/76&oldid=987586" இலிருந்து மீள்விக்கப்பட்டது