பக்கம்:இராவண காவியம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புரட்சிக் கவிஞர், பாரதிதாசன் அவர்கள்

சிறப்புப் பாயிரம்

“பாவண மல்குமி ராவண காவியம் "
நாவண மல்கிய நல்லா சிரியனும்,
நல்மலி ஓல வலசுவாழ் முத்துச்
சாமிசின் னம்மை காமுறு செல்வ
மைந்தனும், ஆய செந்தமிழ்க் குழந்தை
செப்பினான்; அறிவுல கொப்பு மாறே!
இப்பெரு நூற்பயன் எவரும் எய்தும்
விருப்பூர்த் தானாய் திருப்பூர் வள்ளல்
நப்புகழ் எஸ். ஆர். சுப்பிர மணியம்
களித்துமே பதிக்கக் காண்பொருள் முழுதும்
அளித்தபே ருதவி யாதுமறப் பரிதே:-
இராவண காவியம் எனுமிது தமிழகத்
திராவிடம் இலையெனத் திராவிடர் புரிக,
ஆக்கியோன் குழந்தையும், அச்சிடப் பொருளைத்
தூக்கியே தந்த சுப்பிர மணியமும்
ஆழிசூ ழுலகில் என்றும்
வாழிய நன்றே வாழிய நன்றே.

                                    -பாரதி தாசன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/9&oldid=1536869" இலிருந்து மீள்விக்கப்பட்டது