பக்கம்:இருண்ட வீடு, பாரதிதாசன்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருண்ட வீடு

ஓட்டை நீக்கி உள்ளீடு தன்னைக்
காட்டி விளாம் பழம் கருத்தாய்த் தின் என்று
அதையும் குழந்தையின் அண்டையில் வைத்தார்!
குழந்தை கிடந்த கூட மெல்லாம்
உழுந்து கிடந்த ஒரு களம் போலவும்
வேம்பின் பழம்பூ விரிதரை போலவும்
ஈயின் காடும் எறும்பின் காடும்
ஆயிற்று! மைத்துனர் அப்புறம் சென்றார்.

18