பக்கம்:இருண்ட வீடு, பாரதிதாசன்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருண்ட வீடு

ஏட்டினில் இருந்த தென்னவென்றால்:
'அன்புடை யவரே அவ் வாசாமி
ஐந்து நாளில் ஐதாரப் பாக்கம்
போவதாய்த் திட்டம் போட்டிருக் கின்றான்
கடிதம் இதனை கண்டவுடனே
வந்தால் தொகையை வட்டியும் முதலுமாய்
வாங்கி விடலாம் வந்து சேரவும்
அங்கவன் போனபின் இங்குநீர் வருவது
விணே இங்ஙனம் வீரா சாமி”

24