பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு பரம்பரைகள் (சிறுகதைகள்) பேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரை சமூகத்தில் இன்றளவும் தீர்க்கப்பட முடி யாமல் இருக்கின்ற பல்வேறு பிரச்னைகளை அடையாளம் காட்டுவது அல்லது அவைகளை நீக்குவதற்கான பரிகாரம் காண்பது என்பது எல்லோராலும் முடியாத ஒன்று. அதுவும், 'சிறுகதை'யின் வாயிலாகத் தெரியப்படுத்துவது அல்லது அதைப் படிப்போரைத் தெளிய வைப்ப தென்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல ; மிகப் பெரிய ஒரு கலையாகும். அந்தக் கலையில் புதுவழி கண்ட பெருமை பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு நிரம்ப உண்டு. 'சட்'டென்று கிளம்பி, 'பொட்'டென்று தளரும் இக்கால வெறியுணர்ச்சிக் கதைகளுக்கு முற் றிலும் மாறுபட்ட முத்தான-முகம் பார்க்கும் கண்ணாடிபோல் பயன்படும் சத்தான கதை களின் தொகுப்பு நூல் இது. விலை ரு.5.90 பூம்புகார் வெளியீடு