பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

இரும்பு

மற்றோர் முனையில், ஆஸ்க்கார் நிற்கிறான், இதயத்தில் இடம் கொடு என்று கேட்டபடி; மறுத்திடவும் முடியவில்லை; கொடுத்திடவும் துணிவில்லை. போர் மூள்கிறது; நாளாகவாக மோனாவின் போரிடும் ஆற்றல் குறைந்து கொண்டு வருகிறது.

எப்போதும் ஆஸ்க்கார் பற்றிய நினைவு; இரவிலும் பகலிலும்; பார்க்கும்போதும் பார்க்காதிருக்கும் போதும்! அந்தப் பாசம் நிறைந்த கண்கள் அவளைப் படாதபாடு படுத்துகின்றன.

வாய் திறந்து அவன் தன் காதலைக் கூறிவிடவில்லை. ஆனால் அவன்? அவன் கண்கள் வேறென்ன பேசுகின்றன! ஜெர்மானியர்களை வெறுத்த நிலை மாறி, அவர்களிலும் நல்லவர் இருக்கின்றார் என்ற அளவுக்குக் கருத்து மாற்றம் கொண்டு, ஆஸ்க்காரிடம் பச்சாதாபம் காட்டத் தொடங்கி, பிறகு பரிவு கொள்ளத் தொடங்கி, இறுதியில் காதலே அல்லவா அரும்பத் தொடங்கிவிட்டது. நெஞ்சிலே நெருப்பு மூண்டு கிடந்தது; அங்குக் காதல் மலருகிறதே; எப்படி? எண்ணுகிறாள்; விம்முகிறாள்; குமுறுகிறாள்; எப்படியாவது தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகப் போராடுகிறாள்; துடிக்கிறாள்.

"கேட்டாயா பெண்ணே! அக் கொடியவர் செயலை. பள்ளிக்கூடத்தின்மீது குண்டு வீசி, பச்சிளங் குழந்தைகளைக் கொன்றுவிட்டனர். இந்தப் பாவம் சும்மா விடுமா! ஆண்டவன் இதைச் சகித்துக் கொள்வாரா! நமது அரசாங்கம் பழிக்குப் பழி வாங்காமலிருக்குமா! உடனே கிளம்ப வேண்டும்; ஜெர்மன் குழந்தைகள் கொல்லப்படவேண்டும்! ஒன்றுக்கு ஓராயிரம்! பழிக்குப் பழி" - என்று பதறுகிறார் முதியவர்.

"அவர்கள் செய்த கொடுமையை நாமும் செய்வதுதான் நியாயமா! குழந்தைகள் தூய்மையின் சின்னம்! ஜெர்மன்