பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முள்வேலி

35

யாதா! அண்ணன் உயிர் குடித்த அக்ரம ஜெர்மானிய இனத்தானுடன், அடிப் பாதகி! விபச்சாரி..." - முதியவரால் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மகனைக் களத்திலே சாகடித்தான் ஒரு ஜெர்மானியன்! மகளின் கற்பையே அழிக்கத் துணிந்தான் மற்றோர் ஜெர்மானியன்! இதனைக் கண்ட பிறகுமா உயிர் தங்கும் உடலில்! கீழே சாய்ந்தார். கூக்குரல் கேட்டு அங்கு வந்த பண்ணையாட்கள், முதியவரைப் படுக்கையில் கிடத்தினர். மோனாவின் இழிசெயலைப் பற்றி முதியவர் பதறிக் கூறியது அவ்வளவையும் அவர்கள் கேட்டுவிட்டிருந்தனர். மோனா இனி அவர்களிடமிருந்து தப்ப முடியாது. 'அவள் பாதகி! காதகி! விபச்சாரி' என்று கூவிடும் அந்த ஊர் முழுதும். திரும்பிப் பார்த்தாள். ஆஸ்க்காரைக் காணோம். நடந்ததை நினைத்துக் கொண்டாள்; அவளுக்கே நடுக்கம் எடுத்தது. படுக்கையில் பார்க்கிறாள், முதியவர் மரணத்தின் பிடியில் தன்னை ஒப்படைத்து விட்டதை. சுற்றிலும் பார்க்கிறாள், சுட்டுவிடுவது போல பார்வையைச் செலுத்தும் பண்ணையாட்களை. முதியவர் இறந்துவிட்டார்.

ஊரே அவளைத் தூற்றுகிறது; பண்ணையாட்கள் அவளிடம் வேலை செய்வது இழிவு என்று கூறி விலகிக் கொள்கிறார்கள்.

அப்பனைச் சாகடித்தவள்!

ஜெர்மானியனுடன் குலவினவள்!
கெட்ட நடத்தைக்காரி!
காம சேட்டைக்காரி!

என்றெல்லாம் தூற்றுகிறார்கள்; இதயத்தைத் துளைக்கிறார்கள். நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்கமுடியுமா? இனத்தவர் முழுவதும் ஜெர்மானியரிடம் வெறுப்புணர்ச்சியைக் கக்கிடும்போது இவள் ஒரு ஜெர்மானியனுடன் காதல் கொண்டால் சகித்துக் கொள்வார்களா! இனத் துரோகி! நாட்டுத் துரோகி! பெண் குலத்தின் பெருமையையே அழித்தவள் என்று பேசத்தான் செய்வார்கள். ஜெர்மானியன் பிரிட்-