பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை


"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்" என்று கட்டளையிட்டான் மகாகவி பாரதி.

சாத்திரமல்ல, மேனாட்டுச் சரித்திரத்தையே தமிழுக்குக் கொண்டு வந்து காட்டிய பேரறிவாளர் டாக்டர் அண்ணா அவர்களாவார்.

எல்லா நாட்டுச் சரித்திரங்களையும், அதனைத் தழுவிய சுவையான—உருக்கமான சம்பவங்களையும் தமிழ் மக்கள் அறிய வேண்டுமென்ற ஆவலின் காரணமாக பேரறிஞர் அண்ணா அவர்கள் தீட்டிய ஓவியங்கள் கொஞ்சமல்ல.

மேனாட்டு வரலாற்றைக் கதை வடிவில் சொல்வதென்பது சாதாரண விஷயமல்ல; அது ஒரு கலை. அந்தக் கலையில் வல்ல டாக்டர் அண்ணா அவர்கள் படைத்தவற்றில், 'இரும்பு

முள்வேலி' என்னும் தலைப்பிலுள்ள அழகோவியம் தனிச் சிறப்பு மிக்கதாகும்.