பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இனம் கடந்த, மொழி கடந்த, மதம் கடந்த, ஏன், எல்லாமே கடந்த ஒன்று உலகில் இருக்கிறதென்றால் அது காதலாகத்தான் இருக்க முடியும். வேறு எதற்குமே அந்தச் சக்தி கிடையாது.

அப்படிப்பட்ட ஒரு புனிதமானதொரு ஈர்ப்புச் சக்தி உலகில் படும் உயிர்வதையை, இரு வேறு இனத்தைச் சார்ந்த ஆண்—பெண் இடையே கல்லும் கரையும் வண்ணம் சுவையான கதையாக்கிக் காண்பித்துள்ளார். அதுபோலவேதான் மற்ற இருவேறு கதைகளும்!

அத்தகு சிறப்பும் உயிர்த் துடிப்பும் மிக்க பேரறிஞர் அண்ணா அவர்களின் கதைகளை நாங்கள் வெளியிட்டுக் கொள்ளும் உரிமையைப் பூரணமாக வழங்கி இருக்கும் திருமதி ராணி அண்ணாதுரை அவர்கட்கு எங்களின் இதயபூர்வமான நன்றி.

—பூம்புகார் பிரசுரத்தார்