பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் இருபது ஆண்டுகள் இரத்தம் பொங்கிற்று - காலடி பட்ட இடமெல்லாம்! களம் பலப்பல! கடுவேகமாகப் போரிட்டவண்ணம், நாடுபல வென்றான்; நானிலம் நடுங் கிடப் போரிட்டான். எங்கும் இரத்தவெள்ளம்; பிணமலை ; எலும்புக் குவியல்!! போர்! போர்! போர்! என்று முழக்கம் எழுப்பியபடி, இருபது ஆண்டுகள், எங்கும் எவரும் இவன் நடாத்தும் செயல்கள் பற்றியே பேசித் தீரவேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டான்; இரத்தம் பொங்கிற்று-மலை முகடுகளில், பெரு நகரங்களில், சாலைகளில், சோலைகளில், கடலோரங்களில். கிளம்பிலிட்டது இவன் தடாத்திச் செல்லும் பெரும் படை என்று செய்தி வெளிவந்தவுடன், அரண்மனைகளிலே அச்சம்! மாளிகைகளிலே மருட்சி! இல்லங்களிலே திகைப்பு ஏற்பட்டுவிடும். எப் பக்கம் பார்த்துப் பாய்ந்திடுமோ, எவர்மீது தாக்கு தல் நடத்திடுமோ, என்ன நிபந்தனை விதித்திடுமோ என்ற ஏக்கம் குடிகொண்ட நிலையில், பேரரசர்கள் பீதி கொள்வர். 'நேற்றுத்தானே கிளம்பிற்று! இதற்குள்ளாகவா, காடு மலை கடந்து, ஆறுகளைத் தாண்டி, அழகு நகர் மீது தாக்கு தலை நடாத்துகிறது அந்தப் படை' என்று வியந்து கேட் பர்-- அவ்வளவு வேகமாக, எத்தகைய இடுக்கண்களையும் கண்டு கலங்காமல், எதிர்ப்புகளை முறியடித்தபடி, அவனு டைய படைகள் பாய்ந்திடும்.