பக்கம்:இருளும் ஒளியும்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுறம் ஹிருதயம் 95

இவர்கள் இருவரின் பேச்சையும் சற்றுத் தொலைவில் மேஜை அருகில் உட்கார்ந்து காலேஜ் பாடங்களே எழுதிக்கொண் டிருந்த பிதா கவனித்தாள். பாட்டியின் அதுதாபத்தைக் கண்டதும் அவளுக்குக் கோபம் பற்றி எரிந்தது. 'இல்லாததையும், பொல் லாததையும் வந்து சொல்லிவிட்டு இப்பொழுது என்ன இ ை ல் வேண்டி யிருக்கிறது' என்றுதான்் சீதா கோபம் அடைந்தாள். ஆகவே, அவள் சாவித்திரியைச் சிரிக்க வைப்பதற்காகப் பாட்டி யைப் பார்த்து, 'ஏன் பாட்டி! பாட்டைக் காதால்தான்் கேட் பார்கள். அத்திம்பேர் திறந்த வாய் மூடாமல் எப்படிப் பாட் டைக் கேட்க முடியும்?' என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டாள்.

'அடி அம்மா! நீ இங்கே இருக்கிறதை நான் பார்க்கவே இல்லையே. ஒன்றும் பாதியுமாகப் போய் உன் அம்மாவிடமும், அண்ணுவிடமும் கலகம் பண்ணிவைக்காதே. நான் பாட்டுக்கு எங்கேயோ விழுந்து கிடக்கிறேன். நீ சண்டையைக் கிளப்பி விடாதேடி அம்மா. உனக்குப் புண்யம் உண்டு!" என்ருள் பாட்டி சீதாவைப் பார்த்து.

"ஆமாம். . . . . . ஆமாம். . . . . . பாட்டி, இதையெல்லலாம் நேரில் போய்ப் பார்த்துவிட்டு வந்திருக்கிருள்! அதான்் இவ்வளவு வக்கணேயாகச் சொல்கிருள். அதைக் கேட்டுவிட்டு நீயும் அழுகிருய்!' என்று சாவித்திரியைக் கேலியாகப் பார்த்துக் கொண்டு கூறினுள் சீதா.

"ஆமாமடி! பாட்டி ரெயிலேறிப்போய் இதெல்லாம் பார்த்துவிட்டு வருகிருள்! வேறு வேலையே இல்லை பார் அவ ளுக்கு? உன் அத்திம்பேர் விஷயந்தான்் எல்லோருக்கும் தெரிந்: திருக்கிறதே.'

சீதாவுக்கு அங்கே பேசிக்கொண்டு நிற்கப் பொழுதில்லை. காலேஜுக்கு நேரமாகிவிட்டதால் அவள் புறப்பட்டுவிட்டாள்.

சீதா காலேஜூக்குப் போன பிறகு, ஊர் வம்புகளை ஒப்பிக் கும் வழக்கமான வேலையைப் பாட்டி நிர்ப்பயமாக நடத்தினள். அவள், சாவித்திரியின் அருகில் வந்து, 'நேற்று கோவிலுக்குப் போயிருந்தேன். ராமுவைப் பார்த்தேன். அவன் உன்னைப் பற்றி விசாரித்தான்். "ஆமாண்டா அப்பா! சாவித்திரி இங்கே தான்் இருக்கிருள். அவளைக் கொண்டுவந்து விடும்படி சம்பந்தி: வீட்டார் ஒரு வரிகூட எழுதவில்லையே. நீ அந்தப் பக்கம் போயிருந்தாயோ?" என்று கேட்டேன். 'போயிருந்தேன் பாட்டி!" அவர்கள் வீட்டிற்குப் போக வேண்டும் என்று நான் கிளம்ப