பக்கம்:இருளும் ஒளியும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 இருளும் ஒளியும்

இதுவரையில் பேசாமல் ஏதோ முழுகிவிட்டதுபோல் உட்கார்ந்திருந்த சாவித்திரி சரேலென்று எழுந்து, 'எனக்கு இதிலெல்லாம் அவ்வளவு பிடித்தமில்: என்று முன்னுடியே சொல்லி இருக்கிறேனே. வெறுமனே இதென்ன விண் தொந்தரவு?' என்று கூறி அறையைவிட்டுப் போக எத்தனித் தி. . .

ஸ்வர்ணத்துக்கும் கோபம் வந்தது. நாட்டுப்பெண்ணேப் பார்த்து அதட்டும் குரலில், "தி செய்கிறதும். பேசுகிறதும் நன்ருகவே இல்லை, சாவித்திரி. அவன் இஷ்டப்படிதான்் கேட்டு வையேன். இதிலே என்ன குறைந்துவிடப்போகிருய்? அவன் கிழக்கே பார்க்கச் சொன்னல் நீ மேற்கே பார்த்துக் கொண்டு நிற்கிருயே. சுத்தமாக நன்ருக இல்லையே நீ செய்கிறது!" என்ருள் ஸ்வர்ணம்.

"ஆமாம். . . . நன்ருகத்தான்் இல்லை. அதுவும் என்னுடைய இஷ்டம்' என்று வெடுக்கென்று கூறிவிட்டு 'திடுதிடு வென்று மாடிப்படிகளில் ஏறித் தன் அறைக்குள் சென்று தரையில் படுத்துக்கொண்டு கண்ணிர் பெருக்கிளுள் சாவித்திரி.