பக்கம்:இருளும் ஒளியும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 இருளும் ஒளியும்

எல்லாம் மறந்துவிடவேண்டும். அதைப்பற்றித் தப்பித் தவறிக் கூட அவளிடம் பிரஸ்தாபிக்கக்கூடாது என்று ரகுபதி தீர்மானித்துக் கொண்டான். அவன் விந்தனையைக் கலைப்பது

போல் கீழே பூஜை அறையை மெழுகிப் படத்தருகில் வித விதமாகக் கோலம் போட்டுக்கொண்டே மெல்லிய குரலில்

ஸ்ரஸ்வ - பாடிக்கொண் டி. ருந்தாள். மாடியில் ரகுபதியின் அறைக்கு வெளியே இருக்கும் வராந்தாவில் நின்று பார்த்தால் கீழே கூடத்தில் ஊஞ்சலும் அதற்கடுத்தாற்போல் ! !, రెక్ట్ర

அறையும் நன்முகத் தெரியும். குந்தலவராளி ராகத்தில் உருக்க மாக "மாலே மணி வண்ணு' என்கிற ஆண்டாளின் பாசுரத்தை அவள் பாடுவதைக் கேட்டு வராந்தாவின் கைப்பிடிச்சுவர் மீது சாய்ந்து நின்றுகொண்டு அதை ரசிக்க ஆரம்பித்தான்் ரகுபதி. அப்பொழுது மாலை நேரம். எல்லோர் வீட்டிலும் விளக்கேற்றி விட்டார்கள். விதவிதமாக ஆடைகள் உடுத்து இளம் பெண் களும் சிறுமிகளும் கையில் குங்கு மச் சிமிழுடன் ஊரழைக்க வெளியே புறப்பட்டுக்கொண் டிருந்தனர். "இன்று என்ன, விசேஷம்?' என்று ரகுபதி யோசித்தான்். --

"ஓஹோ! நவராத் திரி ஆரம்பம்போல் இருக்கிறது. கல்யாணம் நடந்த வருஷத்தில் மங்களகரமாகக் கணவனுடன் இருந்து பண்டிகைகள் கொண்டாட வேண்டியவள் பிறந்தகத் தில் போய் உட்கார்ந்துகொண் டிருக்கிருள்! ஆயிற்று, நவராத்திரி முடிந்ததும் தீபாவளி வரும். இந்தத் தீபாவளி, தலே தீபாவளி ஆயிற்றே?. மாமனர் வீட்டிலிருந்து பலமாக அழைப்பு வரும் பெட்டி நிறையப் பட்டாசுக் கட்டுகளும், ஆருயிர் மனைவிக்கு வண்ணச்சேலையும் வாங்கிப் போகவேண்டியது. தான்் பாக்கி!' o

ரகுபதிக்கு எதையோ என்னவோ நினைத்து நினைத்துத் தலையை வலிக்க ஆரம்பித்தது. அவன் சிந்தனையைக் கலைத்து அவன் தாய், ரகு!' என்று ஆதரவுடன் கூப்பிட்டாள். இடுக் கிட்டு அவன் திரும்பிப் பார்த்தபோது ஸ்வர்ணம் அவனுக்கு வெகு அருகிலேயே நின்றுகொண் டிருப்பதைக் கண்டான். o

'ஏண்டா அப்பா! திறப்பு விழாவுக்காவது சாவித்திரி வந்துவிட்டால் தேவலே. நாம்தான்் பேசாமல் இருக்கிருேம். ஊரில் நாலு பேர் கேட்பதற்குப் பதில் சொல்ல முடியவில்லையே. உன் மாமருைக்காவது ஒரு கடிதம் எழுதிப் பாரேன்' என்ருள். ஸ்வர்ணம்.