பக்கம்:இருளும் ஒளியும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங் , ருவம் சாவித்திரியும் 73

பயந்துகொண்டே மங்களம் கணவனின் அருகில் வந்து நின்று " அ " என்ன கடிதம்? யார் எழுதி இருக்கிரு.ர்கள்?' என்று விசாரித்தாள். = --

'உன் அழகான மாப்பிள்ாே எழுதியிருக்கிருன்! சங்கீத மண் டபம் கட்டித் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிருளும். நான் வந்து அவனுடன் இருந்து நடத்திவைக்க வேண்டுமாம். உடனே ஒட வேண்டியதுதான்் பாக்கி!' என்று அலட்சியமாகக் கூறிவிட்டு காரியாலயத்துக்குப் புறப்பட்டார்.

சாவித்திரியை அழைத்து வரும்படி எழுதி இருக்கிறதா?' என்று கவலையுடன் விசாரித்தாள் மங்களம்.

அட சி. . . . நீ ஒன்று! "சாவித்திரிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்' என்று கேட்கிற தோரணையில் அல்லவா கடிதம் எழுதி' இருக்கிருன் அவன்? இன்னும் கொஞ்ச காலம் போனல் சாவித்திரி யார்?' என்றே கேட்டு விடுவான்போல் இருக்கிறது! ஹாம்-' என்று கூறிவிட்டுச் சற்றுக் கோபம் அடங்கியவராகத் தன் முகவாயைத் தடவிக்கொண்டே யோசித்தார் ராஜமையர்.

நான் சொல்கிறேனே என்று கோபித்துக்கொள்ளா திர்கள். விரோதத்தை வளர்த்துக்கொண்டே போனல் அப்புறம் குழந்தையின் கதி என்ன ஆகிறது? யோசித்துப் பாருங்கள். நாளைக்கே சந்துருவுக்குக் கல்யாணம் ஆகவேண்டும். அப்புறம் சீதா வளர்ந்துவிட்டாள். அவளுக்கும் உடனே கல்யாணம் பண்ணி ஆகவேண்டும். கணவனுடன் வாழ வேண்டிய பெண் பிறந்த வீட்டில் இருந்தால் பார்ப்பதற்கு நன்ருக இருக்குமா? இந்தச் சந்தர்ப்பத்தையே ஒரு சாக்காக வைத்துக்கொண்டு சாவித்திரியை அழைத்துக்கொண்டு போங்கள். அவர்கள் சரக்கை அவர்களிடம் ஒப்பித்துவிட்டு வந்துவிடுங்கள். அப்புறம் எல்லாம் சரியாகிவிடும்'-மங்களம் இவ்விதம் கூறி விட்டு. ஆவலுடன் கணவன் முகத்தைப் பார்த்தாள்.

"மனேவியை ஏதோ கோபத்தில் அடித்துவிட்டான். நான் கூட உன்னே அடித்திருக்கிறேன் அந்தக் காலத்தில்! இவளும் கோபித்துக்கொண்டு வந்துவிட்டாள். என்னை மதித்து எப். போது வரச்சொல்லிக் கூப்பிட்டிருக்கிருனே, எனக்கு இதைப் பற்றி அவன் ஏதாவது எழுத வேண்டுமோ இல்லையோ? அவ். வளவு கர்வம் பிடித்தவனிடம் என்னைப் போய்ப் பல்லைக் காட்டச் சொல்லுகிருய். 'உம்மைத்தான்ே வரச் சொன்னேன்? இவளை